Friday, November 10, 2017

பிறந்த நாள்_2017


நட்பின் நல்வாழ்த்துடன்
நவம்பர் ஆறு.
நானோ
உறங்கிப் போக,
நடுஇரவில் விழித்து
நித்தம் சிரித்திரு
எனக்கென ! என்றுரைத்து
கண் கசியச் செய்தார், கணவர்.
சை! கைப்பேசியோடு முடிந்ததே
விரைவான வாழ்த்து!
வாழ்கையே விலகியதுபோன்ற
உணர்வொடு முட்பத்தி மூன்றும்
கழிந்ததெப்படியென சிந்தையில்
கண் அயர, நான்
உறங்கிப் போகாமல்,முட்பத்தி நான்கும்
நல்விடியலோடே தொடர்ந்தது.
விழித்தெழுந்ததும்,
வாய் நிறைந்த வாழ்த்தொடு
மகள்,மகன்களருகே...
வயதில் மூத்தவர்களும்,
அவர்கள் ஆசியுடன் !!
சிறுமியாய் நான் ,
கிறுக்கிய கருத்தெல்லாம்
கவிதை புத்தகமாய்
கைகளில் ! கனவோ என்றே
நினைந்து எழ,
கால்கள் தரைத்தொட்டு
நிஐம் உணர்த்தியது.
நட்பும் உறவுகளும்
எனக்கென்றே படைத்ததுபோல் !
எவ்விதமென்று எடுத்தரைக்க
இயலா இன்பம்.
இறைக்கு நன்றி சொல்லி
இனிதே தொடங்கினேன்..
நவம்பர் ஏழு.
நாள் நகர்ந்து,நாளையும் வந்தது.
பிறந்த நாள் பரிசென
சில..
ஆடை ,ஆபரனம்
அழகு சாதனம், திகட்டும்
இனிப்பும், உணவும்.
அவற்றோடு நினைவுகளும்
சேமித்தேன்..
பல.
மழலைகள் ஆட்டமும் ஓட்டமும்,
அவர்களின் பாடலும் பண்பும்
அடேயப்பா !
கற்றுக்கொடுக்கிறான் கடவுள்.
என் ஆயுள் நிஐமாக நானறியேன்.
ஆனால், அதிர்ஷ்டம் என்பதே
நான் தான்.
நன்றியொடும் அடக்கத்தோடும்
நிதமும் வேண்டுகிறேன்
நல் எண்ணம் மட்டும்.

_ Dated Nov 8th,the day after my Birthday







Deputy General Manager


விரும்பி உண்பவருக்குத்தான்
வலுவான உடல் அமையுமென கேட்டதுண்டு.
எதையெல்லாம் விரும்பி
உண்பாரோ தெரியாது.
எதையுண்டாலும் விரும்பியே
உண்பார் தெரியும்.
வீட்டில் மனைவி மக்கள்
ஓய்வெடுத்து களைப்பாற
இடைவிடாது உழைக்கும்
Bean Bag.

_ In the memory Anto Sir _ who looks so huge and Obese.

இயற்கை


இரவும் பகலும்
எதற்காகவும் யாருக்காகவும்
நில்லாமல்,நிதமும்
தோன்றும் வரம்.

இனிப்பும் கசப்புமாய்
எதவரினும் ஏற்ப்பேன்
என் இறுதி வரை.
இயற்கை இருக்கும் வரை.

_ on Shruthi's request.

உனக்காக


கதி கலங்கச் செய்தவரை
கனவிலிருந்தும் களை.
நொந்து நோகச் செய்தவரை
நினைவிலிருந்து ஒதுக்கு.
காத்திருந்ததற்க்கும்
பொறுத்துப் போனதற்க்கும்
அர்த்தம் உண்டு.
குணமே அதுவென்றாகா..
மாசுள்ள மனமும்
மதி பெற்று தெளியும்
மதியழகும் மேன்மைபெறும்
அந்தத்தில் உன்னடிமை
யென்றான பின் ! 

வானதி

கரு நீல மயிலாக
கதைக்கும் கண்ணோடு
களிப்பூட்டும் சிரிப்புடன்
என் முன், வானதி.
கண்ணூறு படும் முன்
கடவுளைக் கேட்கிறேன்
வளமாக வாழட்டும்
எப்போதும் அழகாக
இதே சிரிப்புடன்.

Saturday, October 7, 2017

சுடச் சுட சுவையான பொலீஸ்

கதை சொல் கண்ணா என்றதுமே
நொடியில் கதைத்தான்
கண்ணுறங்கும் வேளையிலே..
கதைச் சொல்லி இளைப்பாறினான்.
மூன்றே வயதான
மாமனிதன் என் மகன்.

காவல் படையிலும் அதன் உடையிலும்
தீராக் காதல் கொண்டவன்.

கதைத் துவக்கம் இப்படி !

ஒரு ஊர்ல ஒரு...

சுடச் சுட

சுவை யாக இருந்தாராம் 

ஒரு பொலீஸ் !

உரக்கச் சிரித்தே  உள்ளத்தின்
உண்மை அன்புணர்ந்தேன்.

உரிச்சொற்கள் உண்டென்றறிந்தும்

பிழைத்திருத்தம் செய்யும்

மனமில்லாமல் !



Anitha'vin Maranam.. NEET


தன்னைத் தானே மன்னிக்க முடியா தருணங்களில்..
பிறரைத் தான் தண்டிக்க இயலா
சூழ்நிலைகளில்..
தன் உணர்வுகளை
பிறர் உணராத
வேளைகளில்..
நேர்மையாய் போரிட நினைத்தும்,
பணமே மொழியென்றானதும்
பேதைக்கு பகைக்க தெரியாததும்
சுயமரியாதையினை இழந்ததும்
உள்நெஞ்சில் உறுதி.
தெய்வம் இருப்பின் ,
எனைக் காணத்தயாரா ?
கடவுளே !
மனிதம் மறிக்கும்.
மரணம் பிறக்கும்.

நன்றியுடன்

எங்கு செல்கிறேன்
எதற்கு செல்கிறேன்
எப்படி செல்கிறேன்
ஏன் என்றே
விளங்காத

வாழ்க்கைப் பயணம்
அழுத்துப்போகும் வேளையில்

என் அருகில்
நானே வந்தமர்ந்து

அழுகையை கூட
அறிந்து உணர்ந்து

விழியின் வழி
வழியும் நீரை
வியக்கிறன் !

வாழ்வு இனிமை தான்..
எதுவரினும் ..ஏக்கமின்றி

"ஏகமாக உணர்ந்து"

வாழ்கயில்.

உணராது உழைக்கையில்
ஒன்றுமே விளங்குவதில்லை.

சற்றே நிதானித்து
என் சுவாசம்
நான் உணரும்
போது தான்

ஓட்டம் வேண்டாம்
உட்கார்ந்து கொள்..

ஆட்டம் வேண்டாம்
அமர்ந்து கொள்.

நடையும் வேண்டாம்
நின்று கொள்.

நன்றி கூற
பல காரணங்கள் !

உயிருள்ள வரை

"உயிர் உணர்ந்து வாழ்ந்தால் "

நன்றி கூற
பல காரணங்கள் !

குறை ஒன்றுமே
இல்லை தான்..

சாகையிலும் கூட
முகத்தினில்
சிரித்த சாயல்.



கணவன்

தவிர்க்க முடியா துன்பமானபோதும்
தொல்லை என்றானபோதும்
என்னுடன் எப்போதும்
ஒட்டிக் கிடக்க என்னில்
நான் விரும்பும் ஒவ்வாமை.
கணவன்.

தோழமை



புதிய நட்பிது
யாரறிவார் ?
பல நாள்
பலத்துடன் 
பகுத்தறிந்து பழகியோரென
பார்ப்பவர் உரைக்க
என் எழுத்தினில்
மட்டுமல்ல,
வரும் வரலாற்றினிலும்,
இடம்பெறலாம் !
எம் பிள்ளைகள்
பாராட்ட வேண்டும்
இந்நட்பு..அவரவர்
பிள்ளையிடத்தில்.

Sunday, January 22, 2017

புரட்சித் திருவிழா

பட்டு வேட்டியும் பள பளக்கும்
புடவையுமாக நாங்கள் !
மாட்டுச் சாணம் கொண்டு
தரைகளை நிறமேற்றி
பச்சரிசி மாக்கோலமும், அதில்
பளிச்சிடும் வண்ணங்களும்.
மணல் அடுப்பும்
மண் பானையுமாக
குழந்தைகள் முதல்
முதியவர் வரை
பரபரக்கும் தருணம் அது.
மஞ்சள் கிழங்கும்
மாவிலைத் தோரணமும்.
திருநீற்று நெத்தியோடும்
சந்தனம் குங்குமத்தோடும்.
இன்சொல்லால் வாய் நிறைந்து,
வயிரு நிறைய இனிப்பும்
கை கொளா நீள் கரும்பும்.
எம் வீட்டுப் பெண்டிர் படைத்த
திகட்டத் திகட்டத்
தின்னத் தோன்றும்,
பச்சரிசிப் பொங்கல்.
கோடிகளில் புரண்டாலும்
கோமாதவை தொழுது,
கோமியம் தெளித்து,
வீட்டினில்; வேதம் பயின்றது போய்..
இன்று நடுரோட்டினில்
திமில்களோடு துள்ளியெழும்
காளைகளாய் சீறுகிறோம் !
வீதிகளில் சிறியோர்
ஆடி முடித்திடும் விளையாட்டல்ல.
நாம், தின்று செரித்த சோற்றுக்காக
உண்ண வழியில்லா உழவருக்காக
வளராதிருக்கும் விளைச்சலுக்காக
வீரம் பொங்க , விடாது முழங்குவோம்.
எங்கள் தைப்பொங்கலுக்கு
விடுமுறையும் வேண்டும் !
எங்கள் ஆண்மை மிகைப்பட
ஏறுதழுவுதலும் வேண்டும் !
இங்கு எங்களைப்
புறந்தள்ளி புகநினைத்தால்,
தீயிலிட்ட வீண் வரட்டிகளாய்
எரிந்திடுவீர் இப்போதே;
எங்கள் முன்னால் !
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
சுண்ணாம்பு பூசுதலுக்கும்
சுவர் அலங்காரங்கள் செய்யவும்
சுறுசுறுப்பாக ஓடி ஆட,
சல்லிக்கட்டில் பாடி ஆட ;
எம் நாட்டுக்கு
வருவோருக்கெல்லாம்
விருந்துபடைக்க காத்திருப்போம்,
சுடர்விட்டுக் காத்திருப்போம்
மகிழ்வோடு ! வரும்
பொங்கல் வரும்வரை.










  

Thursday, January 12, 2017

குணம் கைவிடேல் !


நித்திரையில்,பணிச் சுமையில்
அமைதியில், இரைச்சலில்
நேற்றைய நிகழ்வில்
இன்றைய பொழுதில்,
நாளைய தினத்தில்,
எவ்வேளையிலும்,
வருங்காலத்திலும்
நிஜம் ஒன்றே.
காலம் கடந்தே தீரும்.
கடந்த காலம் கழியட்டும்..
இனிதென இருக்கும் இந்நொடி
கசப்பை போக்கட்டும்.
வாழ்வதில் கவலை இல்லை
சாதலில் அச்சம் இல்லை
இருப்புக்கொள்ளா ஐயம்,
எதிலும் இல்லை.
இங்ஙனம் இவ்விடம்
முழுமையாய்,
இழக்க ஒன்றுமில்லை
அடையவும் ஒன்றுமில்லை.
சேகரித்த நினைவுகள் பல
பெற்ற அனுபவங்கள் சில,
இவற்றோடு நான்..
சிறு ஏமாற்றங்கள்
சிறு ஏற்றங்கள்,
இதனொடு நன்றியும்.
பாரதியை நினைவுகூர்ந்து,
நிமிர்ந்த நன்நடையோடும்
நேர்கொண்ட பார்வையோடும்,
மாறாத மகிழ்வோடு
வரும் புத்தாண்டில்
புன்னகை தவறேன் !
குணமதை கைவிடேன் !

தீர்மானித்து,தெய்வத்தை வணங்கி காத்திருக்கிறேன் ;
இரெண்டாயிரத்து பதினேழாமாண்டு வருகவே !!.


Wishing all my Friends,Siblings,Cousins,Relatives and Families, a very happy and a prosperous New Year 2017. Wrote this on the eve of NewYear.


கனவுக் கண்ணாடி



பிதற்றல்கள்  கருத்துக்களாக
சேட்டைகள் அரிய செயல்களாக
பேதைகள் மேதைகளாக
மெளனம் இடைவிடாப் பேச்சாக
சொற்ப்பொழிவு ஊமையாக
ஊனம் நடனமென
நஞ்செல்லாம் அமுதமாக
கசப்பவை இனிமையாக
பேரிரைச்சல்களோ நிசப்தமாக
தொலைந்தவை கைகளில்
வெறுத்தவை காதலாய்
கண்கள் கசிகிறதே களிப்பில்,
இராவணன் எவருமே இல்லை !
கனவென்னும் இவ்வூரில்.
காண்பவர் எல்லாம்
இராமரும் சீதையுமாக.
கலைகள் இங்கு அறிவியலாம்;
கணக்குகள் கவிதைகளாம்;
தொழில்நுட்பங்கள் ஓவியங்களாம்.
சற்றே விசித்திரம் தான்
இங்குள்ள கண்ணாடிகள்.
விசாலமான பார்வையோடு
விலாசம் தேடுகிறேன்.
"கனவுக் கண்ணாடி" எங்கென்று ?!