உடல் வேறு உயிர் வேறு இல்லை
ஈருடல் ஓருயிர் என்றானபின்.
காதலொடு களவி புரிதலும்,இதுவரை
காணாத களிப்பை ,இனி காணுதலும்
கண்டு உணர்ந்த களிப்பை
மறவாதலும் ,மறைத்தே அதனை
ஒருவரோடு ஒருவர் புதுப்பித்தலும்
இதனை காமம் என கூறாமல், சற்றே
வியந்தேன்! உணர்வொடு சொல்லின், களவியில் உணரப்போவது கடவுளை!
நிச்சயம் உரைக்கிறேன்,
நீ உணர்ந்த கடவுள்,உணர்வாய் மீண்டும்.
உன்னைத்தேடி உனது மடியினில்
உன் முலைக்காம்பு முகர்கையிலே !
பெயர் மாறி இருக்கும்..கடவுள் அல்ல ,
உன் குழந்தை என.
இதனை,வேண்டுமென நினைப்பதால் பிழை அல்ல!
வேண்டாமென்றும் நினைப்பாய்
வேளை வரும் வேளையிலே..!
அப்போது,
வேட்கை,இச்சை,மோகம் எதுவாயினும்
துறந்து,வாழ்க்கை துறந்து,
உன்னையே நீ துறந்து,
வாழ்ந்து கொண்டுதானிருப்பாய்.
வாழாமல் இருக்கும் பலருக்கும் ,
வாழ்க்கை ;
பாடம் கற்பித்ததை கற்பித்துக்கொண்டு,
சுற்றம் சூழ்ந்திருப்பினும்,
கடவுளை வேறு பார்வையில் காண
தனித்திருந்து காத்துக்கிடப்பாய்.
அன்று உணர்வாய் மீண்டும்..
தெய்வம் !
உன் உருவில்..உனது அன்பில்.
உன்னை நீ
பெரிதாய் உணராமல் இருக்க,
"தாய்" என்றானபின் உன்னையே தெய்வமாய் உணர்ந்து கொண்டு,
நீயே அவர்கள் தெய்வம் என உன்னையும் உணரச்செய்யும்
உன் பிள்ளைகள்
உனதருகே இருக்க ..
வாழ்த்துக்கள் !
ஈருடல் ஓருயிர் என்றானபின்.
காதலொடு களவி புரிதலும்,இதுவரை
காணாத களிப்பை ,இனி காணுதலும்
கண்டு உணர்ந்த களிப்பை
மறவாதலும் ,மறைத்தே அதனை
ஒருவரோடு ஒருவர் புதுப்பித்தலும்
இதனை காமம் என கூறாமல், சற்றே
வியந்தேன்! உணர்வொடு சொல்லின், களவியில் உணரப்போவது கடவுளை!
நிச்சயம் உரைக்கிறேன்,
நீ உணர்ந்த கடவுள்,உணர்வாய் மீண்டும்.
உன்னைத்தேடி உனது மடியினில்
உன் முலைக்காம்பு முகர்கையிலே !
பெயர் மாறி இருக்கும்..கடவுள் அல்ல ,
உன் குழந்தை என.
இதனை,வேண்டுமென நினைப்பதால் பிழை அல்ல!
வேண்டாமென்றும் நினைப்பாய்
வேளை வரும் வேளையிலே..!
அப்போது,
வேட்கை,இச்சை,மோகம் எதுவாயினும்
துறந்து,வாழ்க்கை துறந்து,
உன்னையே நீ துறந்து,
வாழ்ந்து கொண்டுதானிருப்பாய்.
வாழாமல் இருக்கும் பலருக்கும் ,
வாழ்க்கை ;
பாடம் கற்பித்ததை கற்பித்துக்கொண்டு,
சுற்றம் சூழ்ந்திருப்பினும்,
கடவுளை வேறு பார்வையில் காண
தனித்திருந்து காத்துக்கிடப்பாய்.
அன்று உணர்வாய் மீண்டும்..
தெய்வம் !
உன் உருவில்..உனது அன்பில்.
உன்னை நீ
பெரிதாய் உணராமல் இருக்க,
"தாய்" என்றானபின் உன்னையே தெய்வமாய் உணர்ந்து கொண்டு,
நீயே அவர்கள் தெய்வம் என உன்னையும் உணரச்செய்யும்
உன் பிள்ளைகள்
உனதருகே இருக்க ..
வாழ்த்துக்கள் !