பட்டு வேட்டியும் பள பளக்கும்
புடவையுமாக நாங்கள் !
மாட்டுச் சாணம் கொண்டு
தரைகளை நிறமேற்றி
பச்சரிசி மாக்கோலமும், அதில்
பளிச்சிடும் வண்ணங்களும்.
மணல் அடுப்பும்
மண் பானையுமாக
குழந்தைகள் முதல்
முதியவர் வரை
பரபரக்கும் தருணம் அது.
மஞ்சள் கிழங்கும்
மாவிலைத் தோரணமும்.
திருநீற்று நெத்தியோடும்
சந்தனம் குங்குமத்தோடும்.
இன்சொல்லால் வாய் நிறைந்து,
வயிரு நிறைய இனிப்பும்
கை கொளா நீள் கரும்பும்.
எம் வீட்டுப் பெண்டிர் படைத்த
திகட்டத் திகட்டத்
தின்னத் தோன்றும்,
பச்சரிசிப் பொங்கல்.
கோடிகளில் புரண்டாலும்
கோமாதவை தொழுது,
கோமியம் தெளித்து,
வீட்டினில்; வேதம் பயின்றது போய்..
இன்று நடுரோட்டினில்
திமில்களோடு துள்ளியெழும்
காளைகளாய் சீறுகிறோம் !
வீதிகளில் சிறியோர்
ஆடி முடித்திடும் விளையாட்டல்ல.
நாம், தின்று செரித்த சோற்றுக்காக
உண்ண வழியில்லா உழவருக்காக
வளராதிருக்கும் விளைச்சலுக்காக
வீரம் பொங்க , விடாது முழங்குவோம்.
எங்கள் தைப்பொங்கலுக்கு
விடுமுறையும் வேண்டும் !
எங்கள் ஆண்மை மிகைப்பட
ஏறுதழுவுதலும் வேண்டும் !
இங்கு எங்களைப்
புறந்தள்ளி புகநினைத்தால்,
தீயிலிட்ட வீண் வரட்டிகளாய்
எரிந்திடுவீர் இப்போதே;
எங்கள் முன்னால் !
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
சுண்ணாம்பு பூசுதலுக்கும்
சுவர் அலங்காரங்கள் செய்யவும்
சுறுசுறுப்பாக ஓடி ஆட,
சல்லிக்கட்டில் பாடி ஆட ;
எம் நாட்டுக்கு
வருவோருக்கெல்லாம்
விருந்துபடைக்க காத்திருப்போம்,
சுடர்விட்டுக் காத்திருப்போம்
மகிழ்வோடு ! வரும்
பொங்கல் வரும்வரை.
புடவையுமாக நாங்கள் !
மாட்டுச் சாணம் கொண்டு
தரைகளை நிறமேற்றி
பச்சரிசி மாக்கோலமும், அதில்
பளிச்சிடும் வண்ணங்களும்.
மணல் அடுப்பும்
மண் பானையுமாக
குழந்தைகள் முதல்
முதியவர் வரை
பரபரக்கும் தருணம் அது.
மஞ்சள் கிழங்கும்
மாவிலைத் தோரணமும்.
திருநீற்று நெத்தியோடும்
சந்தனம் குங்குமத்தோடும்.
இன்சொல்லால் வாய் நிறைந்து,
வயிரு நிறைய இனிப்பும்
கை கொளா நீள் கரும்பும்.
எம் வீட்டுப் பெண்டிர் படைத்த
திகட்டத் திகட்டத்
தின்னத் தோன்றும்,
பச்சரிசிப் பொங்கல்.
கோடிகளில் புரண்டாலும்
கோமாதவை தொழுது,
கோமியம் தெளித்து,
வீட்டினில்; வேதம் பயின்றது போய்..
இன்று நடுரோட்டினில்
திமில்களோடு துள்ளியெழும்
காளைகளாய் சீறுகிறோம் !
வீதிகளில் சிறியோர்
ஆடி முடித்திடும் விளையாட்டல்ல.
நாம், தின்று செரித்த சோற்றுக்காக
உண்ண வழியில்லா உழவருக்காக
வளராதிருக்கும் விளைச்சலுக்காக
வீரம் பொங்க , விடாது முழங்குவோம்.
எங்கள் தைப்பொங்கலுக்கு
விடுமுறையும் வேண்டும் !
எங்கள் ஆண்மை மிகைப்பட
ஏறுதழுவுதலும் வேண்டும் !
இங்கு எங்களைப்
புறந்தள்ளி புகநினைத்தால்,
தீயிலிட்ட வீண் வரட்டிகளாய்
எரிந்திடுவீர் இப்போதே;
எங்கள் முன்னால் !
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
சுண்ணாம்பு பூசுதலுக்கும்
சுவர் அலங்காரங்கள் செய்யவும்
சுறுசுறுப்பாக ஓடி ஆட,
சல்லிக்கட்டில் பாடி ஆட ;
எம் நாட்டுக்கு
வருவோருக்கெல்லாம்
விருந்துபடைக்க காத்திருப்போம்,
சுடர்விட்டுக் காத்திருப்போம்
மகிழ்வோடு ! வரும்
பொங்கல் வரும்வரை.