கதை சொல் கண்ணா என்றதுமே
நொடியில் கதைத்தான்
கண்ணுறங்கும் வேளையிலே..
கதைச் சொல்லி இளைப்பாறினான்.
மூன்றே வயதான
மாமனிதன் என் மகன்.
காவல் படையிலும் அதன் உடையிலும்
தீராக் காதல் கொண்டவன்.
கதைத் துவக்கம் இப்படி !
ஒரு ஊர்ல ஒரு...
சுடச் சுட
சுவை யாக இருந்தாராம்
ஒரு பொலீஸ் !
உரக்கச் சிரித்தே உள்ளத்தின்
உண்மை அன்புணர்ந்தேன்.
உரிச்சொற்கள் உண்டென்றறிந்தும்
பிழைத்திருத்தம் செய்யும்
மனமில்லாமல் !
நொடியில் கதைத்தான்
கண்ணுறங்கும் வேளையிலே..
கதைச் சொல்லி இளைப்பாறினான்.
மூன்றே வயதான
மாமனிதன் என் மகன்.
காவல் படையிலும் அதன் உடையிலும்
தீராக் காதல் கொண்டவன்.
கதைத் துவக்கம் இப்படி !
ஒரு ஊர்ல ஒரு...
சுடச் சுட
சுவை யாக இருந்தாராம்
ஒரு பொலீஸ் !
உரக்கச் சிரித்தே உள்ளத்தின்
உண்மை அன்புணர்ந்தேன்.
உரிச்சொற்கள் உண்டென்றறிந்தும்
பிழைத்திருத்தம் செய்யும்
மனமில்லாமல் !