Saturday, October 7, 2017

நன்றியுடன்

எங்கு செல்கிறேன்
எதற்கு செல்கிறேன்
எப்படி செல்கிறேன்
ஏன் என்றே
விளங்காத

வாழ்க்கைப் பயணம்
அழுத்துப்போகும் வேளையில்

என் அருகில்
நானே வந்தமர்ந்து

அழுகையை கூட
அறிந்து உணர்ந்து

விழியின் வழி
வழியும் நீரை
வியக்கிறன் !

வாழ்வு இனிமை தான்..
எதுவரினும் ..ஏக்கமின்றி

"ஏகமாக உணர்ந்து"

வாழ்கயில்.

உணராது உழைக்கையில்
ஒன்றுமே விளங்குவதில்லை.

சற்றே நிதானித்து
என் சுவாசம்
நான் உணரும்
போது தான்

ஓட்டம் வேண்டாம்
உட்கார்ந்து கொள்..

ஆட்டம் வேண்டாம்
அமர்ந்து கொள்.

நடையும் வேண்டாம்
நின்று கொள்.

நன்றி கூற
பல காரணங்கள் !

உயிருள்ள வரை

"உயிர் உணர்ந்து வாழ்ந்தால் "

நன்றி கூற
பல காரணங்கள் !

குறை ஒன்றுமே
இல்லை தான்..

சாகையிலும் கூட
முகத்தினில்
சிரித்த சாயல்.



No comments: