Saturday, October 7, 2017

சுடச் சுட சுவையான பொலீஸ்

கதை சொல் கண்ணா என்றதுமே
நொடியில் கதைத்தான்
கண்ணுறங்கும் வேளையிலே..
கதைச் சொல்லி இளைப்பாறினான்.
மூன்றே வயதான
மாமனிதன் என் மகன்.

காவல் படையிலும் அதன் உடையிலும்
தீராக் காதல் கொண்டவன்.

கதைத் துவக்கம் இப்படி !

ஒரு ஊர்ல ஒரு...

சுடச் சுட

சுவை யாக இருந்தாராம் 

ஒரு பொலீஸ் !

உரக்கச் சிரித்தே  உள்ளத்தின்
உண்மை அன்புணர்ந்தேன்.

உரிச்சொற்கள் உண்டென்றறிந்தும்

பிழைத்திருத்தம் செய்யும்

மனமில்லாமல் !



No comments: