கதி கலங்கச் செய்தவரை
கனவிலிருந்தும் களை.
நொந்து நோகச் செய்தவரை
நினைவிலிருந்து ஒதுக்கு.
காத்திருந்ததற்க்கும்
பொறுத்துப் போனதற்க்கும்
அர்த்தம் உண்டு.
குணமே அதுவென்றாகா..
மாசுள்ள மனமும்
மதி பெற்று தெளியும்
மதியழகும் மேன்மைபெறும்
அந்தத்தில் உன்னடிமை
யென்றான பின் !
No comments:
Post a Comment