தன்னைத் தானே மன்னிக்க முடியா தருணங்களில்..
பிறரைத் தான் தண்டிக்க இயலா
சூழ்நிலைகளில்..
தன் உணர்வுகளை
பிறர் உணராத
வேளைகளில்..
நேர்மையாய் போரிட நினைத்தும்,
பணமே மொழியென்றானதும்
பேதைக்கு பகைக்க தெரியாததும்
சுயமரியாதையினை இழந்ததும்
உள்நெஞ்சில் உறுதி.
தெய்வம் இருப்பின் ,
எனைக் காணத்தயாரா ?
கடவுளே !
மனிதம் மறிக்கும்.
மரணம் பிறக்கும்.
No comments:
Post a Comment