Thursday, January 12, 2017

கனவுக் கண்ணாடி



பிதற்றல்கள்  கருத்துக்களாக
சேட்டைகள் அரிய செயல்களாக
பேதைகள் மேதைகளாக
மெளனம் இடைவிடாப் பேச்சாக
சொற்ப்பொழிவு ஊமையாக
ஊனம் நடனமென
நஞ்செல்லாம் அமுதமாக
கசப்பவை இனிமையாக
பேரிரைச்சல்களோ நிசப்தமாக
தொலைந்தவை கைகளில்
வெறுத்தவை காதலாய்
கண்கள் கசிகிறதே களிப்பில்,
இராவணன் எவருமே இல்லை !
கனவென்னும் இவ்வூரில்.
காண்பவர் எல்லாம்
இராமரும் சீதையுமாக.
கலைகள் இங்கு அறிவியலாம்;
கணக்குகள் கவிதைகளாம்;
தொழில்நுட்பங்கள் ஓவியங்களாம்.
சற்றே விசித்திரம் தான்
இங்குள்ள கண்ணாடிகள்.
விசாலமான பார்வையோடு
விலாசம் தேடுகிறேன்.
"கனவுக் கண்ணாடி" எங்கென்று ?!

No comments: