பிதற்றல்கள் கருத்துக்களாக
சேட்டைகள் அரிய செயல்களாக
பேதைகள் மேதைகளாக
மெளனம் இடைவிடாப் பேச்சாக
சொற்ப்பொழிவு ஊமையாக
ஊனம் நடனமென
நஞ்செல்லாம் அமுதமாக
கசப்பவை இனிமையாக
பேரிரைச்சல்களோ நிசப்தமாக
தொலைந்தவை கைகளில்
வெறுத்தவை காதலாய்
கண்கள் கசிகிறதே களிப்பில்,
இராவணன் எவருமே இல்லை !
கனவென்னும் இவ்வூரில்.
காண்பவர் எல்லாம்
இராமரும் சீதையுமாக.
கலைகள் இங்கு அறிவியலாம்;
கணக்குகள் கவிதைகளாம்;
தொழில்நுட்பங்கள் ஓவியங்களாம்.
சற்றே விசித்திரம் தான்
இங்குள்ள கண்ணாடிகள்.
விசாலமான பார்வையோடு
விலாசம் தேடுகிறேன்.
"கனவுக் கண்ணாடி" எங்கென்று ?!
No comments:
Post a Comment