Friday, November 10, 2017

பிறந்த நாள்_2017


நட்பின் நல்வாழ்த்துடன்
நவம்பர் ஆறு.
நானோ
உறங்கிப் போக,
நடுஇரவில் விழித்து
நித்தம் சிரித்திரு
எனக்கென ! என்றுரைத்து
கண் கசியச் செய்தார், கணவர்.
சை! கைப்பேசியோடு முடிந்ததே
விரைவான வாழ்த்து!
வாழ்கையே விலகியதுபோன்ற
உணர்வொடு முட்பத்தி மூன்றும்
கழிந்ததெப்படியென சிந்தையில்
கண் அயர, நான்
உறங்கிப் போகாமல்,முட்பத்தி நான்கும்
நல்விடியலோடே தொடர்ந்தது.
விழித்தெழுந்ததும்,
வாய் நிறைந்த வாழ்த்தொடு
மகள்,மகன்களருகே...
வயதில் மூத்தவர்களும்,
அவர்கள் ஆசியுடன் !!
சிறுமியாய் நான் ,
கிறுக்கிய கருத்தெல்லாம்
கவிதை புத்தகமாய்
கைகளில் ! கனவோ என்றே
நினைந்து எழ,
கால்கள் தரைத்தொட்டு
நிஐம் உணர்த்தியது.
நட்பும் உறவுகளும்
எனக்கென்றே படைத்ததுபோல் !
எவ்விதமென்று எடுத்தரைக்க
இயலா இன்பம்.
இறைக்கு நன்றி சொல்லி
இனிதே தொடங்கினேன்..
நவம்பர் ஏழு.
நாள் நகர்ந்து,நாளையும் வந்தது.
பிறந்த நாள் பரிசென
சில..
ஆடை ,ஆபரனம்
அழகு சாதனம், திகட்டும்
இனிப்பும், உணவும்.
அவற்றோடு நினைவுகளும்
சேமித்தேன்..
பல.
மழலைகள் ஆட்டமும் ஓட்டமும்,
அவர்களின் பாடலும் பண்பும்
அடேயப்பா !
கற்றுக்கொடுக்கிறான் கடவுள்.
என் ஆயுள் நிஐமாக நானறியேன்.
ஆனால், அதிர்ஷ்டம் என்பதே
நான் தான்.
நன்றியொடும் அடக்கத்தோடும்
நிதமும் வேண்டுகிறேன்
நல் எண்ணம் மட்டும்.

_ Dated Nov 8th,the day after my Birthday







No comments: