Friday, September 23, 2016

"இவர்கள் இவ்வளவு தான்" !

" இவர்கள் இவ்வளவு தான்" !

குறிஞ்சியிலும்
முல்லையிலும் மட்டும் அல்ல
மருதத்திலும்
நெய்தலிலும்..எஞ்சியிருக்கும்
பாலையிலும்
..
இன்று பணமே
ப்ரதானம் போலும் !
பணத்தைத் தான்
மென்று தின்கின்றார்கள்
நவ நாகரீக உலகில்.

கொடுத்ததை கேட்ப்பது வேறு
பிடுங்குதல் வேறு வேறுபாடு
அறிவரோ மக்கள்.?
இங்கு இருப்பவருக்கு
எல்லாம் சாத்தியம் என்றால்
இல்லாதவர்களுக்கும் சாத்தியம் !

வசை பேசிய நாக்குகள்
வாழ்த்தும் வேளை வரும்..
அவ்வேளையில் பகிர்தலுக்கு
மனிதம் அற்று ,
மனம் மறித்துக் கிடக்கும்.
பணம் தின்னிப் பேய்களாய் இவர்கள்
அலைகையில், இல்லாதவர்கள் உடல் மண்ணுக்கும் ,உயிரோ உயில் இல்லாததொரு உலகில்,
இறந்தாலும் கூட வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் !
" இவர்கள் இவ்வளவு தான்" !.. என்ற இருமாப்புடன்.
இல்லாதோர் யார் ,இழந்தோர் யார்
சிந்தை தெளிகையில்,
சினமே கொள்வீர்
பற்றியிருந்த பணத்தின் மேல் !

Strange thoughts penned on the 4th Birthday of my darling son,Yuvan.