Tuesday, March 8, 2016

அக்கா


நித்தம் கிளம்பும்
காற்றல்ல
நொடியில் கிளம்பும்
புயல்
எப்போதும் பெய்யும்
மழையல்ல
எப்போதாவது பொங்கும்
வெள்ளம்
சகித்தே வாழ்ந்திருந்தால் நீ
வெறும் பிணம்
சினம் கொண்டு
சீறவேண்டும் இனி தினம்.
கல்லைக் கண்டு
குரைத்து ஓடும்
நாயல்ல..
சீறிப்பாயும்
சிங்கமே.
தீபம் மட்டும் அல்ல
இனிமேல் தீயாகவும்
பொறுமையான
ப்ரியா அல்ல
ப்ரத்தியங்கரா
தேவியாய் !

நின் நடத்தை
நரிக்குத் தெரியாது.
நாவினிக்கப் பேசு
இன்று போல் என்றும்.
நல்லவையல்லாததை
யாருரைத்தால் என்ன
நாவிழக்கச்செய் !


This was written on the International Women's Day Of this year(8.3.2016) ..brooding on the situation of women suffering Domestic Violence .

No comments: