நிரந்தரம் இல்லா உலகில்
திருமணம் எனும் பந்தம்
நிரந்தரம் என நினைத்து
வாழும் முட்டாள்களாக இல்லாமல்,
முதிர்ந்த மனைவிகளாய்
மாறிவருகிறோம் நாமும்.
இன்னல் என தெரிந்தும்
இடம் வலம் என இல்லாமல்
அனைத்தையும் கொடுத்தோம்.
நம் மூளைக்கு
இடம் வலம்
எல்லாம் ஒன்றே
என்றெண்ணி
முழுதும் கொடுத்தோம்..
இன்றோ,
இனியும் வாழ
இனிதே இருந்த
தருணங்களை மட்டும்
நினைவில் கொண்டோம்.
No comments:
Post a Comment