Thursday, October 8, 2009

இந்தியா


பிச்சைக்காரியானாலும்,
பிள்ளைபெற தவறுவதில்லை.
பிள்ளை பெறாதவளாயினும்,
தத்தெடுக்க முனைவதில்லை.
அடுக்குமாடிகளும் ஆங்காங்கே
கன்றாவிக் குடிசைகளுமாய் ,
அழகாய்த்தான் இருக்கிறது...
என் நாடு.
இவ்வழகை இவர்கள்
அழகென்று பறைசாற்றிக்கொள்ள,
அசிங்கமெனத்தோன்றுகிறதேன் - எனக்கு மட்டும் ?

1 comment:

vinuarvind said...

அம்மா என்று மூன்றெழுத்தில் அழைத்தேன்...
தாயே என்று ஈரெழுத்தில் அழைத்தேன்...
ஒரெழுத்தில் அழைத்திட ஆசை!!!
அகராதியை புரட்டி புரட்டி நரைத்தது மீசை!!!

விடவில்லை!
விழுந்தேன்... எழுந்தேன்...
வலியில் 'ஆ' என்று அலறினேன்...
வந்தாளே அன்னை
முதலீரழைப்பில்
இல்லாத வேகத்தில்!!!