Sunday, October 4, 2009

பிறப்பும் இறப்பும்


ஒவ்வொரு முறையும்
பிறந்தநாள்
கொண்டாடுகிறாய்,
ஒரு முறையாவது
நினைவில் வைத்துக்கொள்
யாரும் உன்
இறந்தநாளை
கொண்டாடக்கூடாதென்று .

வாழ்வின் தொடக்கம்
ஓர் விபத்துதான்.
வியந்து போக
எதுவும் இல்லை...

விடியலுக்கு ஒரு இரவுபோல்
விரைவில் முடிந்துதான் போகும்.

பள்ளிச் சிறுமியென
பரிவோடே தொடர்ந்தேன் ,

பருவப் பெண்ணென
பயந்தே தொடர்ந்தேன் ,

தேவையற்றதோ திருமணம் ?
தவிப்போடே தொடர்ந்தேன்,

தொடக்கங்கள் பலவாக
தோற்றங்களும் பலவாக,

ஒரு கணம் கொடுங்கள்.

வாழ்வின் விடுமுறைக்கு
விண்ணப்பிக்கமாட்டேன் நானாக

வாழ்த்துக்களுடந்தான் விடைபெறும்
என் வாழ்க்கையும் .

1 comment:

Kavin said...

This one is too good