Thursday, September 3, 2009

கல்லூரிக் காலம்-நாம் சேர்ந்திருந்த அந்தச் சில நொடிகள் ...

வருடங்கள் பல,
வாழ்ந்திருக்கும்;
காகிதமலராய் இல்லாமல்
இன்று தோன்றி ,
இன்றே மறையும் ;
வாசமலராய்..
நமது பந்தம்.

காணாத ஒன்றை
கண்டுவிட்ட துடிப்பும்,
கண் இமைக்கும் நேரத்தில்
காணாது போவதுமாய் ...
நமது பந்தம்.

கல்லூரிக் கடலில்
நான் கண்டெடுத்த
முத்துக்களுல் ஒன்றாய்..
நீங்கள்.

இளங்கலைப் பயணம்
இதோ முடிந்தது ;
முதுகலைப் பயணம்
முன் நிற்கிறது;

கல்வியின் காதலோடு
அடுத்தடுத்துப் பயணிக்கும்
பாதைகளில்,
பழைய சுவடுகளின்
புதிய தோற்றமாய்
பொங்கட்டும் இன்பம்.
நீங்காத நட்பும்
கலங்காத காதலும்
வாழ்வே வெற்றியுமாய் அமைய,
வாழ்த்த விரும்புகிறேன் .

படைத்தவன்
நம்மைப் பிரிப்பது
பிரிவின் சுகத்தை சுவைக்க.

நிதமும் இனி ..
சந்தித்துக் கொண்டே இல்லாமல் ,
சிந்தித்திருப்போமா , சிலகாலங்கள் ?!

No comments: