Wednesday, September 2, 2009

தேடல்

இளைஞனே ,
பருவமிது உனைத்தேடி
பாதிப்பை உண்டாக்க,
பாவை இவளது
பார்வை தேடி,
பேதை உன்
வாழ்வு ,பாழாவதா ?
சிகரத்தை அடையக்கூடியவனே
சீற்றம் எதற்கடா
இச்சிறு வயதில் ?
சிந்தித்து செயல்பட்டு ,
சிறப்பை நீ தேடிக்கொள்ள
பெற்றோருக்குப் பெருமை சேர்த்து ,
பெருந்தன்மை நீ தேடிக்கொள்ள ,
பாவை அவள்...
நீ தேடியவள்....
உனது பாசத்தைத் தேடி ...
இதோ ....வருகிறாள். !

No comments: