Monday, February 8, 2016

காணாமல் போன காதல்

மனது வலிக்க,
மூளை செயல்பட
விரும்பி வருவதை
ஏற்ப்பதா மறுப்பதா
என்ற கவலையில் தோன்றியது, இது !

உண்மை.
சற்றே வலிக்கிறது நெஞ்சம்.
நிறைவேறாத ஆசைகள்
ஒவ்வொன்றையும் நிறைவேற்றி,
பின் ,நினைத்ததையெல்லாம்
சாதிக்கத்தெரிந்தவள்
என்கையில்..
"மறவாதே மனமே !
கடந்தது கிடக்கட்டும்
கேளிக்கை காண்
என மறவாதே எனை.."
ஒவ்வொரு முறையும்
ஏமாந்து போன மூளை      
பிதற்றுகிறது வலியில் !

No comments: