Tuesday, November 10, 2009

Why so sensitive ,lady..? No matter how dark the night is,the sun always rises again .

கால்கள் கடக்கின்ற
பாதைகளில்..
கல்லும்,முள்ளும்
கண்ணில் படுவது சகஜம் !
கண்டும் காணாதது போல்
கவனமாய் கடக்கிறாய் ,,,
வழிகளில் மட்டும் !

வாழ்வினில் மட்டும் பின் ஏன்
இந்தத் தயக்கம் ?

வருத்தம் தருபவர்களை எண்ணி ,
நீ வருந்துவதால் ,
வசந்தத்தை தருவார்கள்
என்று என்ன நிச்சயம் ?

அவர்கள் வாழ்த்தவோ ,
நீ வருந்தவோ ,அவர்கள்
உன் வாழ்க்கை அல்ல.

மற்றும்...ஓர் வினாப் பொருள் ?! அவ்வளவே.


No comments: