Wednesday, July 13, 2016

இருப்பு நிலையும் இறக்கும்..

இருப்பு நிலையும் இறக்கும்..
இழத்துணிந்தேன் அதுபோல்..
நானும் !!
இறப்பதும் இனிது தான்
இது தான் வாழ்க்கை என்றானபின் !
சொல்லி உணர்த்த ஆளில்லை என்பதால்
சொல்லாமல் இருந்ததும் இல்லை,ஏதும்
உணராமல் இருந்ததும் இல்லை.
இருந்தவர் இறந்தபின்
இருப்பவரும் இறந்தவர் ஆயினர்.
அனைவரும் இருந்தும்,
யாரும் இல்லாததால்,
இவ்விடம் இங்ஙணம்,
இருந்துகொண்டே,நிதமும் இறக்கின்றேன்
நானும்.

No comments: